5 24
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் குறித்து வெளியான தகவல்

Share

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் குறித்து வெளியான தகவல்

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.

22ம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவு கிடைக்காவிட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றை கலைப்பதற்கு இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இந்த சட்ட மூலத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி சவால்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிச்சயமற்ற நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு நாடாளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சி குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தற்போதைய அரசியல் வேறும் திசை நோக்கி பயணிக்கக் கூடிய சாத்தியம் உண்டு என காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 22ம் திருத்தச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறு நீதி அமைச்சர், அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்த நிச்சயமற்ற நிலையை தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தலை அமைச்சர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....

esterrrr
இலங்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – குற்றவாளிகளை பாதுகாத்த நீதவான்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. சுரேஷ் சலே...