5 24
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் குறித்து வெளியான தகவல்

Share

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் குறித்து வெளியான தகவல்

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.

22ம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவு கிடைக்காவிட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றை கலைப்பதற்கு இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இந்த சட்ட மூலத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி சவால்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிச்சயமற்ற நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு நாடாளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சி குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தற்போதைய அரசியல் வேறும் திசை நோக்கி பயணிக்கக் கூடிய சாத்தியம் உண்டு என காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 22ம் திருத்தச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறு நீதி அமைச்சர், அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்த நிச்சயமற்ற நிலையை தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தலை அமைச்சர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...