jaffna 720x375 1
செய்திகள்இலங்கை

நிகழ்நிலையில் யாழ். பல்கலை பட்டமளிப்பு

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு நிகழ்வின் இரண்டாவது பகுதி பட்டமளிப்பு இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தலைமையில்
கைலாசபதி கலையரங்கில் பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு விழாவை, கொவிட் பரவல் காரணமாக நடாத்துவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி மறுத்திருந்தார்.

பட்டக்கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களின் நன்மைக்காக, பட்டங்களை உறுதிப்படுத்தி, நிகழ்நிலையில் பட்டமளிப்பு விழாவை நடாத்த முடிவு செய்யப்பட்டதற்கு இணங்க, இன்று நிகழ்நிலையில் பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இரண்டு அமர்வுகளாக இடம்பெற்ற பட்டமளிப்பு நிகழ்வில், துறைசார் பீடாதிபதிகளால் பட்டங்களை நிறைவு செய்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டன.

கொவிட் பரவல் நிலை பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர், சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு வைபம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1726034823 FDIs 2
செய்திகள்இலங்கை

இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீடு 138% உயர்வு: 2025 செப்டம்பர் வரை $827 மில்லியன் ஈட்டப்பட்டுள்ளது

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில், இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான...

9 18
இலங்கைசெய்திகள்

2029 இல் சிறையில் அடைக்கப்படவுள்ள அநுரவின் 159 எம்.பிக்கள் : கம்மன்பில சீற்றம்

பிவிதுரு ஹெல உருமய (Pivithuru Hela Urumaya) கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான உதய கம்மன்பில அவர்கள்,...

8 19
இலங்கைசெய்திகள்

யாழ். கடற்பகுதிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பில் புலனாய்வாளர்கள்

யாழ்ப்பாணம் – குடாநாட்டின் கடல் பகுதியில் அதிகமாக கடற்படை கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுபாப்பு...

7 19
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி : பலர் கலக்கத்தில்

சட்டவிரோத சொத்துக்குவிப்பு தொடர்பில் விசேட விசாரணை பிரிவு இலங்கையில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவிப்புக்கள் தொடர்பில்...