2 17 scaled
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பல மில்லியன் ரூபா நட்டம்

Share

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பல மில்லியன் ரூபா நட்டம்

நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 800 வைத்தியர்கள் சுகாதார அமைச்சுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தத் தவறியதன் காரணமாக அரசாங்கத்திற்கு பல மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழுவில் தெரியவந்துள்ளது.

இந்த வைத்தியர்கள் தொடர்பில் சட்ட திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால கோப் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 31 மில்லியன் ரூபா செலவில் கொண்டுவரப்பட்ட 213 கைரேகை இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமை தொடர்பில் கோப் குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய அமைச்சுகளுடன் ஒப்பிடும் போது அதிகளவு மேலதிக நேரங்களை செலுத்தும் சுகாதார அமைச்சின் மோசமான நிர்வாகம் நாட்டுக்கு பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கோப் குழு வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...