24 66933d3a9416c
இலங்கைசெய்திகள்

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாதாள உலக தலைவர்களால் மீண்டும் போதைப்பொருள் கடத்தல்

Share

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாதாள உலக தலைவர்களால் மீண்டும் போதைப்பொருள் கடத்தல்

இலங்கையின் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான தலைவர்களாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ, குடு சலிந்து, வெலே சுதா மற்றும் பொடி லஸ்ஸி ஆகிய குற்றவாளிகள் சிறைச்சாலையில் இருந்து மீண்டும் போதைப்பொருள் கடத்தலை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த பாதாள உலகக் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து ஆறு நவீன கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதன் பின்னர் அவர்களின் பாதாள உலகச் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவ மற்றும் குடு சாலிந்து ஆகிய இரு பாதாள உலகக் குற்றவாளிகள் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் பாதாள உலகச் செயற்பாடுகளிலோ போதைப்பொருள் கடத்தல்களிலோ ஈடுபடவில்லை என பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

எனினும் இந்த குற்றவாளிகள் தற்போது தமது கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி பாதாள உலகக் கும்பல் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளை நடத்தி வருவதாக தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பில் இருக்கும் குடு சாலிந்து மற்றும் வெலே சுதா ஆகியோரிடம் 04 ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரும், பூஸ்ஸ சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கணேமுல்ல சஞ்சீவ மற்றும் பொடி லேசி ஆகியோரிடம் மேலும் இரண்டு ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர்களின் கைகளுக்கு இந்த கையடக்கத் தொலைபேசிகள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...