4 16
இலங்கைசெய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் கால்நடைகள் இலங்கைக்கு

Share

இந்தியா – பாகிஸ்தான் கால்நடைகள் இலங்கைக்கு

இலங்கைக்கு கால்நடைகளை வழங்க இந்தியாவும் பாகிஸ்தானும் இராஜதந்திர மட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளன.

இலங்கையில் பசும்பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் அதிகளவான பாலை பெறக்கூடிய பசுக்கள் இல்லாதது இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் இலங்கையின் பசும்பால் உற்பத்தி தொழிலை மேம்படுத்துவதற்காக பசுக்களை வழங்குவதற்கு குறித்த இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இலங்கையின் காலநிலைக்கு ஏற்ற பசுக்கள் மற்றும் எருமைகள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மட்டுமே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்திய அரசு, சாஹிவால் என்ற வகை பசு மாடுகளையும், பாகிஸ்தான் , முரா என்ற வகை எருமை மாடுகளையும் இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும், அந்த திட்டங்கள் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
03 3
செய்திகள்உலகம்

ஈரானின் அதிரடி பதிலடித் தாக்குதல்கள்: அண்டை நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான்...

02 2
உலகம்செய்திகள்

பெய்ரூட் மற்றும் டெஹ்ரான் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் இராணுவம் லெபனான் தலைநகர் பெய்ரூட்...

01 2
உலகம்செய்திகள்

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்திய கத்தார்: வான்வழித் தாக்குதல்களால் ராஜதந்திர உறவில் விரிசல்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலில், ஈரானுடன் தற்போது எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை...

25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...