19 1
இலங்கைசெய்திகள்

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்கான செலவு: மத்திய வங்கி அறிக்கை

Share

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்கான செலவு: மத்திய வங்கி அறிக்கை

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்கான செலவு 939.5 பில்லியன் ரூபாவாக 1.7% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பான மத்திய வங்கியின் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் படி, 2022 ஆம் ஆண்டில், அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக ரூ. 956.2 பில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, ​​2023 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்காக செலவிடப்படும் தொகை ரூ. 16.7 பில்லியன் குறைந்துள்ளது.

எவ்வாறாயினும், ஓய்வூதியச் செலவு 2023 ஆம் ஆண்டு, 372.4 பில்லியன் ரூபாவாக 20.5% அதிகரித்துள்ளது.

இதேவேளை, 2022ஆம் ஆண்டில் ஓய்வூதியம் வழங்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட செலவினம் 309.1 பில்லியன் ரூபாவாகும்.

ஓய்வூதிய செலவினங்களின் அதிகரிப்புக்கான முக்கிய காரணம், ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டமை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலையில், வளர்ந்து வரும் அரச துறையை வரையறுக்கப்பட்ட நிதி இடத்தின் கீழ் பராமரிப்பது எதிர்காலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...