17 1
இலங்கைசெய்திகள்

சிறிலங்கா அதிபரின் பதவிக் கால விவகாரம்: அம்பலமாகும் அரசாங்கத்தின் முயற்சி

Share

சிறிலங்கா அதிபரின் பதவிக் கால விவகாரம்: அம்பலமாகும் அரசாங்கத்தின் முயற்சி

சிறிலங்கா அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து மக்கள் கருத்துக் கணிப்புக்கு செல்ல அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (Chandima Weerakkody) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் சிறிலங்கா அதிபரின் பதவிக் காலம் குறித்து மக்கள் கருத்து கணிப்பை நடத்த உச்சநீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டாலும் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை கூட அரசாங்கத்தால் பெற முடியாது எனவும் எதிர்க்கட்சி என்ற வகையில் அதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு அதிகாரம் கிடைத்த 17ஆம் திகதி, அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அறிவிப்பை ஒத்திவைத்தால், அரசாங்கத்தின் தந்திர வியூகத்தின் வெற்றிக்கு தேவையான கால அவகாசம் வழங்குது போல் ஆகிவிடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...