12 1
இலங்கைசெய்திகள்

கொழும்பில் கொலை செய்யப்பட்ட வசந்த – வெளிநாட்டு நபருக்காக காத்திருக்கும் சடலம்

Share

கொழும்பில் கொலை செய்யப்பட்ட வசந்த – வெளிநாட்டு நபருக்காக காத்திருக்கும் சடலம்

அத்துருகிரியில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் சடலம் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலை இரண்டு நாட்களுக்கு வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் தனியார் மலர்சாலையில் வைத்திருப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த கிளப் வசந்தாவின் இரண்டாவது மகன் வெளிநாட்டில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்நாட்டிற்கு வரும் வரையில் சடலத்தை மலர்சாலையில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அதுருகிரியில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட கிளப் வசந்த என்ற தொழிலதிபர், அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் பச்சைகுத்தும் நிலைய உரிமையாளர் துலான் சஞ்சுலாவும் ஒருவராகும். குறித்த ஏழு பேரும் நேற்றிரவு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிளப் வசந்த கொலைச் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நயனா வசுலாவின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் நேற்று பிற்பகல் தலாஹேன பொது மயானத்தில் இடம்பெற்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...