8 6
இலங்கைசெய்திகள்

கொலைக்களமாக மாறப்போகும் இலங்கை – பலரை கொலை செய்ய திட்டம்

Share

கொலைக்களமாக மாறப்போகும் இலங்கை – பலரை கொலை செய்ய திட்டம்

பிரான்ஸில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரான் மற்றும் டுபாயில் பதுங்கியிருக்கும் லொக்கு பெட்டி ஆகியோரின் கொலை திட்டம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பாடகர், நடிகர் உட்பட 07 பேரை கொலை செய்வதற்கு காஞ்சிபனியும் லொகு பெட்டியும் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது.

இந்த 7 பேர் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதாகவும், அதனைத் திருப்பிக் கொடுக்காமையினால் கொலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இந்த பாடகர் மற்றும் அவரது குழுவினர் பாதாள உலக உறுப்பினர்கள் பதுங்கியிருக்கும் நாடுகளுக்கு சென்று வைபவம் ஒன்றில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் படுகொலை திட்டத்தின் உண்மை தன்மை தொடர்பில் விசாரிப்பதற்கு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...