24 668bf1cba039a
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம்: வெளியான காரணம்

Share

தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம்: வெளியான காரணம்

அத்துருகிரியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் வெளிநாட்டில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துருகிரியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ள பிரபல பாடகி கே.சுஜீவாவிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் வெளிநாட்டில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு எனவும், சில காலமாக நிலவி வந்த தகராறு துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெறுவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிளப் வசந்தவின் மனைவியின் பயணப் பொதியில் ரிவோல்வர் ஒன்று காணப்பட்டதாகவும், அது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
uni
இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்.

பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் ,யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...