24 668bea21d71b6
இலங்கைசெய்திகள்

கொழும்பில் அழைப்பிதழினால் வந்த உயிராபத்து – சமூக வலைத்தளங்களில் பரவும் படங்கள்

Share

கொழும்பில் அழைப்பிதழினால் வந்த உயிராபத்து – சமூக வலைத்தளங்களில் பரவும் படங்கள்

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் அமைந்துள்ள அழகு கலை நிலையத்தை திறப்பதற்கு கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவிற்கு கிடைத்த அழைப்பிதல் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

சுரேந்திர வசந்த பெரேராவிற்கு அழகு கலை நிலையத்தை திறப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கமைய இன்று காலை அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் அமைந்துள்ள அழகு கலை நிலையத்தை திறப்பதற்காக சுரேந்திர வசந்த பெரேரா தனது மனைவியுடன் சென்றுள்ளார்.

இதன்போது ​​துப்பாக்கியை ஏந்திய இருவர் அழகு கலை நிலையத்திற்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த சுரேந்திர வசந்த பெரேரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அழைப்பிதழ்களை பெற்ற ஏனையவர்கள் காயமடைந்துள்ளனர்.

மனைவியும் சுடப்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பாடகி கே சுஜீவாவும் கலந்து கொண்டதுடன் அவரும் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

காயமடைந்த மேலும் இரு பெண்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
Man S Death Body
இலங்கை

தொடருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சடலம்!

வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம்...

vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....