24 668aae2e0fddd 2
இலங்கைசெய்திகள்

ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காட்டுப் பூனை: தொடரும் விசாரணை

Share

ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காட்டுப் பூனை: தொடரும் விசாரணை

உரிய அனுமதியின்றி இலங்கைக்கு (Sri Lanka) கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆபிரிக்க (Africa) காட்டுப் பூனையொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சுங்க அதிகாரிகள் மேலும் கூறுகையில், இந்த விலங்குகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதாகவும் அதனால் சர்வதேச ரீதியில் இவற்றுக்கு அதிக விலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கண்டி (Kandy) பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரினால் இந்த விலங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்டுப் பூனை மக்கள் பார்வைக்காக தெஹிவளை (Dehiwala )மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இலங்கை சுங்கம் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் பல்லுயிர் பாதுகாப்பு, கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...