24 668aae2e0fddd 2
இலங்கைசெய்திகள்

ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காட்டுப் பூனை: தொடரும் விசாரணை

Share

ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காட்டுப் பூனை: தொடரும் விசாரணை

உரிய அனுமதியின்றி இலங்கைக்கு (Sri Lanka) கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆபிரிக்க (Africa) காட்டுப் பூனையொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சுங்க அதிகாரிகள் மேலும் கூறுகையில், இந்த விலங்குகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதாகவும் அதனால் சர்வதேச ரீதியில் இவற்றுக்கு அதிக விலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கண்டி (Kandy) பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரினால் இந்த விலங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்டுப் பூனை மக்கள் பார்வைக்காக தெஹிவளை (Dehiwala )மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இலங்கை சுங்கம் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் பல்லுயிர் பாதுகாப்பு, கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....