24 668aae2e0fddd 2
இலங்கைசெய்திகள்

ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காட்டுப் பூனை: தொடரும் விசாரணை

Share

ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காட்டுப் பூனை: தொடரும் விசாரணை

உரிய அனுமதியின்றி இலங்கைக்கு (Sri Lanka) கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆபிரிக்க (Africa) காட்டுப் பூனையொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சுங்க அதிகாரிகள் மேலும் கூறுகையில், இந்த விலங்குகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதாகவும் அதனால் சர்வதேச ரீதியில் இவற்றுக்கு அதிக விலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கண்டி (Kandy) பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரினால் இந்த விலங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்டுப் பூனை மக்கள் பார்வைக்காக தெஹிவளை (Dehiwala )மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இலங்கை சுங்கம் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் பல்லுயிர் பாதுகாப்பு, கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...