24 668aafe8d46c9
இலங்கைசெய்திகள்பொழுதுபோக்கு

இரண்டாவது ரி 20 : இந்தியாவின் அதிரடியில் மண்கவ்வியது சிம்பாப்வே

Share

இரண்டாவது ரி 20 : இந்தியாவின் அதிரடியில் மண்கவ்வியது சிம்பாப்வே

சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ரி 20 போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தின் மூலம் இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

ஹராரேயில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 234 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அவர் 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து ஆட்டமிழந்தார். அத்துடன் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) 77 ஓட்டங்களையும்,ரிங்கு சிங்( Rinku Singh) 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பின்னர் 235 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சிம்பாப்வே அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Wessly Madhevere அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றதுடன், Luke Jongwe 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முகேஸ் குமார்(Mukesh Kumar)ஆவேஷ் கான்(Avesh Khan) இருவரும் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

நேற்றைய(06) தினம் இடம்பெற்ற முதலாவது ரி20 போட்டியில் சிம்பாப்வே 13 ஓட்டங்களால் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ரி 20 தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளன.

 

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...