24 6680f522acbc0
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்

Share

இலங்கையின் கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்

நாளை (01) முதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளின் (Sri lanka Passport) செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதனைக் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய (Harsha Ilukpitiya) தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு வசதியாக நாளை முதல் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் அச்சிடுவதற்கு ஏலங்கள் கோரப்பட்ட பின்னர் ஒரு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் குடிவரவுத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த திட்டம் தொடங்கப்பட்டவுடன் ஆண்டுதோறும் சுமார் 7 இலட்சம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை வழங்க முடியும் என திணைக்களம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...