24 667a9ed5b09e4
இலங்கைசெய்திகள்

கணித பிரிவில் கல்வி கற்றுவந்த உயர்தர மாணவனின் விபரீத முடிவு

Share

கணித பிரிவில் கல்வி கற்றுவந்த உயர்தர மாணவனின் விபரீத முடிவு

கம்பளையில் 18 வயதான உயர்தர மாணவரொருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இவர் க.பொ.த சாதாரண தரத்தில் 8 ஏ சித்திகள் மற்றும் ஒரு பி சித்தியை பெற்று உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி பயின்று வந்துள்ளார்.

குறித்த மாணவன் தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்ற பின் சகோதரன், இளைஞரின் அறைக்கு வந்து பார்த்த போது அவர் சுடப்பட்ட நிலையில் கிடப்பதை அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் உடனடியாக சகோதரன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த மாணவன் பெரும்பாலும் இணையவழி பாடங்களைச் செய்துள்ளதோடு, கணினி மற்றும் தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே அவர் இணையவழி விளையாட்டிற்கு அடிமையாகி, தேர்வை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இளைஞர் இறந்த இடத்திலிருந்து கத்தியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், தனது தந்தைக்கு சொந்தமான துப்பாக்கியையே அவர் பயன்படுத்தியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...