24 667a9ed5b09e4
இலங்கைசெய்திகள்

கணித பிரிவில் கல்வி கற்றுவந்த உயர்தர மாணவனின் விபரீத முடிவு

Share

கணித பிரிவில் கல்வி கற்றுவந்த உயர்தர மாணவனின் விபரீத முடிவு

கம்பளையில் 18 வயதான உயர்தர மாணவரொருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இவர் க.பொ.த சாதாரண தரத்தில் 8 ஏ சித்திகள் மற்றும் ஒரு பி சித்தியை பெற்று உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி பயின்று வந்துள்ளார்.

குறித்த மாணவன் தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்ற பின் சகோதரன், இளைஞரின் அறைக்கு வந்து பார்த்த போது அவர் சுடப்பட்ட நிலையில் கிடப்பதை அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் உடனடியாக சகோதரன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த மாணவன் பெரும்பாலும் இணையவழி பாடங்களைச் செய்துள்ளதோடு, கணினி மற்றும் தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே அவர் இணையவழி விளையாட்டிற்கு அடிமையாகி, தேர்வை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இளைஞர் இறந்த இடத்திலிருந்து கத்தியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், தனது தந்தைக்கு சொந்தமான துப்பாக்கியையே அவர் பயன்படுத்தியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 97
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்” – டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

ஈரான் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் தனக்குத்தானே விதித்துக்கொண்ட காலக்கெடு செவ்வாய்க்கிழமை நெருங்கிக்கொண்டிருந்த...

Untitled 96
உலகம்செய்திகள்

நிலவின் மறுபக்கத்திலிருந்து பூமி: ஆர்டெமிஸ் II விண்கலக் குழுவினரின் வரலாற்றுச் சாதனைப் புகைப்படம் வெளியீடு!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் சென்றுள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ (Artemis...

Untitled 95
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லக்விஜய மின் நிலைய நிலக்கரி கொள்முதல்: விசேட தணிக்கை அறிக்கை வெளியீடு!

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக லங்கா நிலக்கரி நிறுவனம் மேற்கொண்ட நிலக்கரி கொள்முதல் செயல்முறை குறித்தும்,...

Untitled 94
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு நெருக்கடி: மக்களுக்குப் பாரிய நிவாரணத் தொகுப்பை அறிவித்தார் ஜனாதிபதி அனுர!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில், நடந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியால்...