32 2
இலங்கைசெய்திகள்

கட்டாய ஓய்வு பெறும் அரச ஊழியர்கள்

Share

கட்டாய ஓய்வு பெறும் அரச ஊழியர்கள்

அரச உர நிறுவனங்களான லங்கா உரக் கம்பனி மற்றும் வர்த்தக உரக் கம்பனி ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஊழியர்களில் 278 பேர் இன்று (18) முதல் கட்டாய ஓய்வு பெற்றுள்ளனர்.

குறித்த தகவலை விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ளது.

மேற்படி, இரண்டு உர நிறுவனங்களும் இனி ஒரு நிறுவனமாக ஒரு தலைவர் மற்றும் ஒரு இயக்குநர் குழுவின் கீழ் செயல்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், ஓய்வுபெற்ற 278 ஊழியர்களுக்கும் 8 இலட்சம் ரூபா தொடக்கம் 90 இலட்சம் ரூபா வரையான ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வு கிரிபத்கொடையில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, இந்த கட்டாய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...