16 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தினால் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது: ஹரினி அமரசூரிய

Share

அரசாங்கத்தினால் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது: ஹரினி அமரசூரிய

அரசாங்கத்தினால் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை ஒத்திவைப்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 17ம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதிக்குள் நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையையும், ஆர்வத்தையும் மலினப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு தரப்பினரைக் கொண்டு பல்வேறு கருத்துக்களை சமூகத்தில் பரப்ப முயற்சிப்பதாகத் கூறியுள்ளார்.

அரசாங்கம் தேர்தலில் தோல்வியைத் தழுவும் என்பது நிச்சயமாக தெரிந்த காரணத்தினால் அரசாங்கம் மக்கள் ஆணையை மலினப்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 17ம் திகதிக்கும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதிக்கும் இடைப்பட்ட நாள் ஒன்றில் கட்டாயமாக நடத்த வேண்டுமென கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...