16 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தினால் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது: ஹரினி அமரசூரிய

Share

அரசாங்கத்தினால் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது: ஹரினி அமரசூரிய

அரசாங்கத்தினால் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை ஒத்திவைப்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 17ம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதிக்குள் நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையையும், ஆர்வத்தையும் மலினப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு தரப்பினரைக் கொண்டு பல்வேறு கருத்துக்களை சமூகத்தில் பரப்ப முயற்சிப்பதாகத் கூறியுள்ளார்.

அரசாங்கம் தேர்தலில் தோல்வியைத் தழுவும் என்பது நிச்சயமாக தெரிந்த காரணத்தினால் அரசாங்கம் மக்கள் ஆணையை மலினப்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 17ம் திகதிக்கும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதிக்கும் இடைப்பட்ட நாள் ஒன்றில் கட்டாயமாக நடத்த வேண்டுமென கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...