24 666d7ca4205d7
இலங்கைசெய்திகள்

தங்க நகைகளுடன் வழிதவறிய வயோதிப பெண்ணுக்கு நெகிழ்ச்சி செயல்

Share

தங்க நகைகளுடன் வழிதவறிய வயோதிப பெண்ணுக்கு நெகிழ்ச்சி செயல்

நுவரெலியா(Nuwara eliya) – தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் தங்க ஆபரணங்களோடு வழி தவறிய வயோதிப பெண்ணொருவருக்கு உதவிய தோட்ட தொழிலாளிக்கு தோட்ட நிர்வாகம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் தங்க ஆபரணங்களுடன் வயோதிப பெண்ணொருவர் வழி தவறி சென்றுள்ளார்.

இதனை அறிந்துக்கொண்ட தோட்ட தொழிலாளி ஒருவர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளதுடன் வழி தவறிய வயோதிப பெண்ணுக்கு உதவி செய்து அவரை பாதுகாப்பாக தங்க வைத்து உரிய வீட்டில் அவரது ஆவணங்களோடு ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில், குறித்த தோட்ட தொழிலாளியின் சேவையையும் மனிதாபிமானத்தையும் கருத்திற்கொண்டு அவருக்கு தோட்ட நிர்வாகம் பரிசு பொதியொன்றை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

இதன்போது, தலவாக்கலை – மட்டுகலை பகுதியை சேர்ந்த 80 வயது மதிக்கதக்க மருதமுத்து இளையாத்தா என்ற வயோதிப பெண்ணே வழி தவறியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...