33
உலகம்செய்திகள்

ரூ.8000 கோடி முதலீட்டால் சென்னையில் வரவிருக்கும் பிரம்மாண்ட குடியிருப்பு

Share

ரூ.8000 கோடி முதலீட்டால் சென்னையில் வரவிருக்கும் பிரம்மாண்ட குடியிருப்பு

சென்னையில் பிரிகேட் குழுமம் 15 மில்லியன் சதுர அடியில் குடியிருப்பு, அலுவலகம், சில்லறை வணிகம் மற்றும் விருந்தோம்பல் திட்டங்களுக்காக ரூ.8,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.13,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இது மத்திய சென்னையில் முதல் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவற்றை கொண்ட ஒரு மிகப்பெரிய அமைப்பை உருவாக்கவுள்ளது.

இதற்காக சிங்கப்பூரில் உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் SOG பணியமர்த்தப்படவுள்ளார்.

ஏற்கனவே குறித்த நிறுவனம் சென்னையில் சுமார் 5 மில்லியன் சதுர அடியிலான கட்டடங்களை கட்டியது.

மேலும் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளதாகவும் பிரிகேட் குழுமம் தெரிவித்துள்ளது.

1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிரிகேட் குழுமம், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், மைசூர், கொச்சி, குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அலுவலகங்களை கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 683d8e458a9b7
இலங்கைசெய்திகள்

நெருப்புடன் விளையாட வேண்டாம் :அமெரிக்காவிற்கு சீனா கடும் எச்சரிக்கை

தாய்வான்(taiwan) பிரச்சனை சீனாவின்(china) உள்நாட்டு விவகாரமாகும். அதில் அமெரிக்கா(us) தலையிடுவது சரியல்ல. நெருப்புடன் அமெரிக்கா விளையாடக்...

25 683d85e661f0d
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை ஆட்சி அமைப்பு: மொட்டுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான ஆதரவு தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பொன்றை...

images 18
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட முன்னாள் நகரசபைத் தலைவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (02.06.2025) கைது செய்யப்பட்ட தலவாக்கலை (Talawakelle) – லிந்துலை...

25 683d9e89f25aa
இலங்கைசெய்திகள்

பைடன் கொலை செய்யப்பட்டார் – தற்போதிருப்பது யார்..! பகீர் கிளப்பிய ட்ரம்பின் பதிவு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது சமூக ஊடக தளமான ட்ரூத்...