33
உலகம்செய்திகள்

ரூ.8000 கோடி முதலீட்டால் சென்னையில் வரவிருக்கும் பிரம்மாண்ட குடியிருப்பு

Share

ரூ.8000 கோடி முதலீட்டால் சென்னையில் வரவிருக்கும் பிரம்மாண்ட குடியிருப்பு

சென்னையில் பிரிகேட் குழுமம் 15 மில்லியன் சதுர அடியில் குடியிருப்பு, அலுவலகம், சில்லறை வணிகம் மற்றும் விருந்தோம்பல் திட்டங்களுக்காக ரூ.8,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.13,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இது மத்திய சென்னையில் முதல் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவற்றை கொண்ட ஒரு மிகப்பெரிய அமைப்பை உருவாக்கவுள்ளது.

இதற்காக சிங்கப்பூரில் உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் SOG பணியமர்த்தப்படவுள்ளார்.

ஏற்கனவே குறித்த நிறுவனம் சென்னையில் சுமார் 5 மில்லியன் சதுர அடியிலான கட்டடங்களை கட்டியது.

மேலும் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளதாகவும் பிரிகேட் குழுமம் தெரிவித்துள்ளது.

1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிரிகேட் குழுமம், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், மைசூர், கொச்சி, குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அலுவலகங்களை கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...