13 2
உலகம்செய்திகள்

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்த 5 புதிய உறுப்பு நாடுகள்

Share

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்த 5 புதிய உறுப்பு நாடுகள்

பிரிக்ஸ்(BRICS) கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 உறுப்பு நாடுகள் புதிதாக இணைந்துள்ளன.

ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் குறித்த 5 நாடுகளும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்துள்ளன.

சா்வதேச விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரேஸில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ‘பிரிக்’ கூட்டமைப்பை கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் நிறுவின.

இதைத் தொடா்ந்து, 2010 செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவை உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு ‘பிரிக்ஸ்’ என மறுபெயரிடப்பட்டது. உலகப் பொருளாதார வளா்ச்சியின் முக்கிய இயந்திரமாக இருந்துவரும் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளுடன் 25 சதவீத உலகப் பொருளாதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னாட்டு கூட்டமைப்பாக பிரிக்ஸ் திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் , பிரிக்ஸ் விரிவாக்கத்தில் இணைந்த நாடுகளை இந்தியா வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய உறுப்பினர்களின் வருகையால், புவியியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேம்பட்ட உறுப்பினர் ஆதரவை கொண்ட பிரிக்ஸ், உலக அரசியல் மற்றும் பொருளாதார கூட்டாண்மை உறவுகளை மறுசீரமைக்கும் திறன் பெறுகிறது என இந்தியா மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...