13
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு உயர் பதவிகளை வகிப்போர் குறித்து ஜனாதிபதி தீர்மானம்

Share

பாதுகாப்பு உயர் பதவிகளை வகிப்போர் குறித்து ஜனாதிபதி தீர்மானம்

பாதுகாப்புத்துறை சார் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளின் பதவிக் காலங்களை நீடிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாத இறுதி வரையில் இவ்வாறு பதவிக் காலம் நீடிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு அமையவே பாதுகாப்புப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அண்மையில் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாத்திற்கு முன்னதாக தங்களது பதவிக் காலம் முடிவடையும் முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை பிரதானிகளின் பதவிக் காலம் இவ்வாறு நீடிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில் நாட்டின் பாதுகாப்பு திட்டம் அதேவிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...