உலகம்செய்திகள்

வரலாற்றில் தடம்பதிக்கும் சீனாவின் கனவுத்திட்டம்: நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகள்

24 6664cd433cfbc
Share

வரலாற்றில் தடம்பதிக்கும் சீனாவின் கனவுத்திட்டம்: நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகள்

நிலவின் தென் துருவத்தில் தனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ள சீனாவின் லாங் மார்ச்-5 விண்கலமானது அங்கிருந்து மண் மற்றும் கற்கள் துகளை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் கனவு திட்டம் என கூறப்படும் இந்த ஆராச்சியானது, சர்வதேச நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

சர்வதேச நாடுகள் இதுவரை தடம் பதிக்காத நிலவின் தென் துருவத்தில் விண்கலனை இறக்கி இந்தியா உலக சாதனையை படைத்தது.

இதனையடுத்து நிலவின் தென் துருவத்திற்கு ரஷ்யாவும், ஜப்பானும் அடுத்தடுத்து விண்கலன்களை அனுப்பின.

ஆனால், இரு நடவடிக்கைகளும் தோல்வியடைந்திருந்தன. இதன் தொடர்ச்சியாக சீனா மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.

அதாவது, நிலவின் மற்றொரு பகுதியிலிருந்த மண்ணை பூமிக்கு கொண்டுவருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இதன் காரணமாகவே லாங் மார்ச்-5 விண்கலத்தை சீனா நிலவில் செலுத்தியுள்ளது.

இது சாத்தியமானால், நிலவின் மறுபக்கத்திலிருந்து மண் துகள்களை எடுத்து வந்த முதல் நாடு என்கிற பெருமையை சீனா பெறும்.

இதற்கான விண்கலமானது தெற்கு ஹைனான் தீவில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து கடந்த மாதம் ஏவப்பட்டது.

இதில் Chang’e-6 எனும் ஆய்வுக் கருவி இணைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கருவி நிலவில் தரையிறங்கியுள்ளது.

இது நிலவின் மறு பக்கத்திலிருந்து மண் மற்றும் கற்கள் துகளை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்பும் என சீனா கூறியுள்ளது.

இந்த திட்டத்தில் பிரான்ஸ், இத்தாலி, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கெடுத்துள்ளனர்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....