24 6663d13fbd60f
இலங்கைசெய்திகள்

வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் அறிவிப்பு

Share

வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் அறிவிப்பு

கடந்த நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான முரண்பாடான தகவல்களையடுத்து வீதியில் பயணிக்கும் போது கட்டாயம் எடுத்த செல்ல வேண்டிய ஆவணங்கள் தொடர்பில் பொலிஸார் மீள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

அனைத்து சாரதிகளும் சாதாரண வாகனங்களுக்கு 4 ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் அல்லது ஹைட்பிரிட் வாகனங்களுக்கு மட்டும் 3 ஆவணங்கள் தேவைப்படுவதாகவும் கனரக வாகனங்களுக்க 5 ஆவணங்கள் தேவைப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்னர்.

ஓட்டுநர் உரிமம், வருமானச் சான்றிதழ் மற்றும் அதன் நகல் (புகைப்பட நகல் கண்ணாடியில் ஒட்டப்பட வேண்டும்), வாகன காப்பீட்டு சான்றிதழ், வாகன உமிழ்வு சான்றிதழ் ஆகியவை கட்டாய ஆவணங்களாகும்.

மேலும் கனரக வாகனங்களுக்கு மட்டும் வாகனத் தகுதிச் சான்றிதழ் தேவையாகும். வாகனத்தில் பயணிக்கும் போது சிலர் வாகனப் பதிவுச் சான்றிதழை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை என பொலிஸ் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையில் வாகனத்தை எடுத்துச் செல்வது தொடர்பான சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் அது அவசியம் என தவறாகத் தெரிவித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பொலிஸார் இதனை தெளிவுப்படுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...