nanan
இலங்கைசெய்திகள்

நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு 3 கோடி நிதி!

Share

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் வாழ்வியலை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இந்த இரு மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட நன்னீர் நிலைகளில் மீன் மற்றும் இறால் குஞ்சுகளை இடும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்காக 3 கோடி 22 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 லட்சம் 65 ஆயிரம் இறால் குஞ்சுகளும் சுமார் 22 லட்சத்து 81 ஆயிரத்து 314 மீன் குஞ்சுகளும் சுமார் தெரிவு செய்யப்பட்ட 25 நீர்நிலைகளில் இடப்பட்டுள்ளன.

அதேபோல், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு, அக்கராயன் உட்பட சுமார் 7 குளங்களிலும் பருவகால நீர்நிலைகளிலுமாக 12 லட்சம் இறால் குஞ்சுகளும் 13 லட்சத்து 89 ஆயிரத்து 570 மீன் குஞ்சுகளும் விடப்பட்டுள்ளன.

எஞ்சிய இறால் மற்றும் மீன் குஞ்சுகள் எதிர்வரும் வாரங்களில் தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் விடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 700 குடும்பங்களும் நன்மையடைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...