nanan
இலங்கைசெய்திகள்

நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு 3 கோடி நிதி!

Share

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் வாழ்வியலை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இந்த இரு மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட நன்னீர் நிலைகளில் மீன் மற்றும் இறால் குஞ்சுகளை இடும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்காக 3 கோடி 22 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 லட்சம் 65 ஆயிரம் இறால் குஞ்சுகளும் சுமார் 22 லட்சத்து 81 ஆயிரத்து 314 மீன் குஞ்சுகளும் சுமார் தெரிவு செய்யப்பட்ட 25 நீர்நிலைகளில் இடப்பட்டுள்ளன.

அதேபோல், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு, அக்கராயன் உட்பட சுமார் 7 குளங்களிலும் பருவகால நீர்நிலைகளிலுமாக 12 லட்சம் இறால் குஞ்சுகளும் 13 லட்சத்து 89 ஆயிரத்து 570 மீன் குஞ்சுகளும் விடப்பட்டுள்ளன.

எஞ்சிய இறால் மற்றும் மீன் குஞ்சுகள் எதிர்வரும் வாரங்களில் தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் விடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 700 குடும்பங்களும் நன்மையடைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...