nanan
இலங்கைசெய்திகள்

நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு 3 கோடி நிதி!

Share

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் வாழ்வியலை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இந்த இரு மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட நன்னீர் நிலைகளில் மீன் மற்றும் இறால் குஞ்சுகளை இடும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்காக 3 கோடி 22 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 லட்சம் 65 ஆயிரம் இறால் குஞ்சுகளும் சுமார் 22 லட்சத்து 81 ஆயிரத்து 314 மீன் குஞ்சுகளும் சுமார் தெரிவு செய்யப்பட்ட 25 நீர்நிலைகளில் இடப்பட்டுள்ளன.

அதேபோல், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு, அக்கராயன் உட்பட சுமார் 7 குளங்களிலும் பருவகால நீர்நிலைகளிலுமாக 12 லட்சம் இறால் குஞ்சுகளும் 13 லட்சத்து 89 ஆயிரத்து 570 மீன் குஞ்சுகளும் விடப்பட்டுள்ளன.

எஞ்சிய இறால் மற்றும் மீன் குஞ்சுகள் எதிர்வரும் வாரங்களில் தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் விடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 700 குடும்பங்களும் நன்மையடைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...