24 65a11c4687d64
சினிமாசெய்திகள்

இறக்கும் நேரத்தில் மற்றவர்களை பற்றி யோசித்து நடிகை ஸ்ரீவித்யா செய்த விஷயம்- நெகிழ்ந்த மக்கள்

Share

இறக்கும் நேரத்தில் மற்றவர்களை பற்றி யோசித்து நடிகை ஸ்ரீவித்யா செய்த விஷயம்- நெகிழ்ந்த மக்கள்

தமிழ் சினிமாவில் அழகுக்கு பெயர் போன ஒரு நடிகை ஸ்ரீவித்யா.
இவர் பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கர்நாடக இசை பாடகி எம்.எல். வசந்த குமாரி ஆகியோர் மகள் தான் ஸ்ரீவித்யா. இவர் பிறந்த ஒரு வருடத்தின் அப்பா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட அவரது மனைவி குடும்பத்தை கவனிக்க நேர்ந்தது.

பொருளாதார நெருக்கடி காரணமாக 14 வயதிலேயே திரையுலகிற்குள் நுழைந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. தமிழில் திருவருட்ச்செல்வன், தெலுங்கில் பெட்டராஷி பெத்தம்மா என்ற படங்களில் மூலம் அறிமுகமானார்.
அனைவரையும் ஈர்க்கும் அழகு, அசாத்திய நடிப்பு, அசத்தல் நடனம் என ஸ்ரீவித்யா பெரிய வளர்ச்சி கண்டார்.

கமல்ஹாசனுடன் ஏற்பட்ட காதலுக்கு ஸ்ரீவித்யா அம்மா சம்மதிக்காததால் இருவரும் பிரிந்தனர்.
பின் 1978ம் ஆண்டு மலையாள இயக்குனர் ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்தவர் சில பிரச்சனைகளால் 1980ல் விவாகரத்து செய்தார்.

அதன்பின் சினிமாவில் 2வது இன்னிங்ஸை தொடங்கியவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தினார்.
ஆனால் 2003ம் ஆண்டு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அந்த நேரத்தில் மிகவும் முக்கியமான முடிவையும் எடுத்துள்ளார்.

தான் சேர்த்த கோடிக்கணக்கான சொத்துக்களை இசை, நடனக் கல்லூரியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்க முன்வந்தார். நடிகர் கணேஷின் உதவியுடன் அறக்கட்டளை தொடங்கி அதன்மூலம் உதவிகள் செய்தார்.

3 வருடமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தவர் 2006ம் ஆண்டு தனது 53வது வயதில் உயிரிழந்தார். இறக்கும் நேரத்தில் மற்றவர்களுக்காக யோசித்து ஸ்ரீவித்யா செய்த இந்த விஷயத்திற்கு பிரபலங்களை தாண்டி மக்களுக்கு பாராட்டினார்கள்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...