24 665eaf13723ea
இலங்கைசெய்திகள்

கொழும்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் ஆபத்து

Share

கொழும்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் ஆபத்து

கொழும்பிலும் (Colombo) அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு கலங்கலான நீர் கிடைப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் காரணமாக கலட்டுவா நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக பாதையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த நிலமை காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று (03) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பல பிரதேசங்களுக்கு காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கலகெதர, பாதுக்க, கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பலன்வத்த, மத்தேகொட, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பெப்பிலியான ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் கிடைக்கும் என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளியேறிய பிரதான நீர் குழாயின் பணிகள் விரைவில் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...