24 665d51103d868
இலங்கைசெய்திகள்

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்லேவெல மற்றும் கனேகொட தொடருந்து நிலையங்களுக்கும் வெயங்கொட மற்றும் கம்பஹா தொடருந்து நிலையங்களுக்கும் இடையில் இவ்வாறு சமிக்ஞை அமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடருந்து திணைக்கள (Sri Lanka Railways) துணைப் பொது முகாமையாளர் ஜெ.என்.இந்திபொலகே (J.N. Inthipolage) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீரற்ற வானிலையுடன் பிரதான மார்க்கம், கரையோர மார்க்கம் மற்றும் புத்தளம் மார்க்கத்திலும் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில தொடருந்து சேவைகள் தாமதமாக வருவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை வாக மற்றும் கொஸ்கம தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் தொடருந்துகள் வாக தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...