qatar
செய்திகள்இலங்கை

இலங்கை பயணிகளுக்கான தடையை நீக்கியது கட்டார்

Share

இலங்கை பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கட்டார் அரசாங்கம் நீக்கியுள்ளது.

இதன்படி, முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட இலங்கை பயணிகளுக்கான எல்லை கட்டுப்பாடுகளை கட்டார் தளர்த்தியுள்ளது.

எதிர்வரும் 6ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. எனினும் கட்டார் செல்லும் பயணிகள் இரண்டு நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

12 வயதிற்கு மேற்பட்ட முழுமையாகத் தடுப்பூசி ஏற்றியவர்கள் இரண்டு நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கட்டார் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 6ம் திகதியிலிருந்து இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாட்டவர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கலாம் என கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கட்டார் வருவதற்கு முன்னர் பயணிகள் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அந்த சோதனை முடிவுகள் கொவிட்-19 தொற்றுக்கு எதிர்மறையாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...