24 6656e9a161b0e
இலங்கைசெய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

Share

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் வழமை போன்று இயங்கும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.

கல்வி அமைச்சு (Ministry of Education) இன்று (29.5.2024) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கங்கள் ஆரம்பிக்கவுள்ள பணிப் பகிஷ்கரிப்புக்கு மத்தியில் பாடசாலைகள் இயங்காது என கூறப்படுகின்ற பின்னணியிலேயே, கல்வி அமைச்சு (Ministry of Education) இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது.

இதேவேளை பல கோரிக்கைகளை முன்வைத்து பல ஆசிரியர் சங்கங்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் மேற்கொள்ளும் தொழில் நடவடிக்கையில், பிரதான ஆசிரியர் சங்கங்கள் இணையாது என சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பை முடித்துக்கொண்டு மீண்டும் பணிக்கு திரும்புமாறும், தமது பிரச்சினைகளை அதிபர்நியமித்த நிபுணர் குழுவிடம் முன்வைக்குமாறும் கல்வி அமைச்சு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுக்கு இன்று(28) கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...