24 6656e9a161b0e
இலங்கைசெய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

Share

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் வழமை போன்று இயங்கும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.

கல்வி அமைச்சு (Ministry of Education) இன்று (29.5.2024) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கங்கள் ஆரம்பிக்கவுள்ள பணிப் பகிஷ்கரிப்புக்கு மத்தியில் பாடசாலைகள் இயங்காது என கூறப்படுகின்ற பின்னணியிலேயே, கல்வி அமைச்சு (Ministry of Education) இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது.

இதேவேளை பல கோரிக்கைகளை முன்வைத்து பல ஆசிரியர் சங்கங்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் மேற்கொள்ளும் தொழில் நடவடிக்கையில், பிரதான ஆசிரியர் சங்கங்கள் இணையாது என சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பை முடித்துக்கொண்டு மீண்டும் பணிக்கு திரும்புமாறும், தமது பிரச்சினைகளை அதிபர்நியமித்த நிபுணர் குழுவிடம் முன்வைக்குமாறும் கல்வி அமைச்சு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுக்கு இன்று(28) கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...