24 6654229b4af99
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியால் ஆளுநர்களுக்கு அழைப்பு

Share

ஜனாதிபதியால் ஆளுநர்களுக்கு அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil wickremesinghe) தலைமையிலான இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இலங்கையின் (Sri Lanka) ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதத்தின் நடுப்பகுதிக்கு முன்னதாக அனைத்து Cசெயற்பாடுகளையும் பூர்த்தி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் கடந்த ஆண்டின் இறுதியில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக மாகாண மட்டங்களிலான அபிவிருத்திப் பணிகள் குறித்து கலந்துரையாடி, தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஆளுநர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது பொது மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...