24 6652b428e9bcf
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தை ஏமாற்றிய வர்த்தகர்கள் : கோடிக்கணக்கான கறுப்பு பணம்

Share

அரசாங்கத்தை ஏமாற்றிய வர்த்தகர்கள் : கோடிக்கணக்கான கறுப்பு பணம்

இலங்கையில் கோடிக்கணக்கான ரூபா வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி 01 முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் செலுத்த வேண்டிய மொத்த வரி தொகை 106,608 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பணம் செலுத்தத் தவறியவர்களின் எண்ணிக்கை 4479 என மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடி முதல் 1.5 கோடி வரை வரி செலுத்தாதவர்கள் 3108 உள்ளனர். இதில் மது உற்பத்தி செய்யும் 28 நிறுவனங்களும் அடங்கும்.

இதில் உள்நாட்டு வருமானத் திணைக்களம் அதிக தொகையை வசூலிக்க வேண்டும், அந்த தொகை 105,600 கோடி ரூபாவாகும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பான 350 நிலுவையிலுள்ள வரி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது.

அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் இருந்து 2934 முறையீடுகள் மற்றும் வரி ஆணைக்குழுவிடமிருந்து 1505 முறையீடுகள் நிலுவையில் உள்ளதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

 

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...