24 6652aa81bec14
இந்தியாசெய்திகள்

புதுடில்லி மருத்துவமனையில் தீப்பரவல்:குழந்தைகள் பலி

Share

புதுடில்லி மருத்துவமனையில் தீப்பரவல்:குழந்தைகள் பலி

இந்தியாவின் புதுடில்லி (New Delhi) – விவேக் விஹாரில் அமைந்துள்ள குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளின் உடலங்கள் கட்டிடத்தின் மேல் தளங்களில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எஞ்சிய குழந்தைகள், மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், முழு கட்டிடமும் தீப்பிழம்புகளால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று குஜராத் ராஜ்கோட்டில் சிறுவர்களுக்கான கேளிக்கை இடம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் இதுவரை 9 சிறுவர்கள் உட்பட்ட 37 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...