24 665144fef2798
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முன்னணி நகை உற்பத்தி நிறுவனங்களில் அதிரடி

Share

இலங்கையில் முன்னணி நகை உற்பத்தி நிறுவனங்களில் அதிரடி

இலங்கையில் 13 முன்னணி நகை உற்பத்தி நிறுவனங்களை சுங்கப் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.

அவற்றிலிருந்து சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டதாகக் கூறப்படும் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோத தங்கம் கையிருப்புக்காக 4400 கோடி ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட உள்ளது.

சிலர் சட்டவிரோதமான முறையில் தங்கத்தை விடுவிக்க தயாராகி வருவதாகவும் சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் பல முன்னணி நகை நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் சட்டவிரோதமாக தங்கத்தைப் பெற்றதாக கூறப்படுகிறது.

நாட்டில் உள்ள முக்கிய நகை நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான வழிகள் மூலம் தங்கப் கையிருப்பைப் பெறுகின்றன. இதனால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு சுமார் 30000 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாக சுங்கப் பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
mahavali
இலங்கை

மகாவலியில் மாயமான 15 வயதுச் சிறுவன் – தேடுதல் பணிகள் தீவிரம்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் மூன்று சிறுவர்கள் இணைந்து...

gun p
இலங்கை

டெங்கு ஒழிப்பில் சிக்கியது துப்பாக்கி.

பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின்...

harsa
இலங்கை

நூலிழையில் உயிர் பிழைத்தார் ஹர்ஷ டி சில்வா!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 20ஆம் திகதி மாலை...

car bike
இலங்கை

நுவரெலியாவில் கோர விபத்து.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் நேற்று மாலை நுவரெலியா நோக்கி...