24 6650ce2631325
இலங்கைசெய்திகள்

தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் கைது

Share

தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் கைது

கையூட்டல் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பொறுப்பினை ஒப்படைத்த பெண்ணிடம் 30000 ரூபா கையூட்டல் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எஹலியகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்த அதிபரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விநியோகம் செய்யப்பட்ட உணவிற்கான கொடுப்பனவை பெறுவதற்கு பரிந்துரை செய்வதற்காக குறித்த பெண்ணிடம் அதிபர் 50000 ரூபா கையூட்டலாக கோரியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அதிபர் ஏற்கனவே குறித்த பெண்ணிடம் 20000 ரூபா கையூட்டலாக பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இரண்டாவது தடவையாக குறித்த அதிபர் 30000 ரூபா கையூட்டலை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது லஞ்ச ஊழல் மோசடி தவிப்பு பிரிவினர் அதிபரின் காரியாலயத்தில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...