24 6650ce2631325
இலங்கைசெய்திகள்

தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் கைது

Share

தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் கைது

கையூட்டல் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பொறுப்பினை ஒப்படைத்த பெண்ணிடம் 30000 ரூபா கையூட்டல் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எஹலியகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்த அதிபரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விநியோகம் செய்யப்பட்ட உணவிற்கான கொடுப்பனவை பெறுவதற்கு பரிந்துரை செய்வதற்காக குறித்த பெண்ணிடம் அதிபர் 50000 ரூபா கையூட்டலாக கோரியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அதிபர் ஏற்கனவே குறித்த பெண்ணிடம் 20000 ரூபா கையூட்டலாக பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இரண்டாவது தடவையாக குறித்த அதிபர் 30000 ரூபா கையூட்டலை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது லஞ்ச ஊழல் மோசடி தவிப்பு பிரிவினர் அதிபரின் காரியாலயத்தில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...