24 664ec17536170
இலங்கைசெய்திகள்

அதிகாரபூர்வ கடன் குழுவுடன் கைச்சாத்திடவுள்ள இலங்கை

Share

அதிகாரபூர்வ கடன் குழுவுடன் கைச்சாத்திடவுள்ள இலங்கை

நாட்டின் கடன்களை மறுசீரமைப்பதற்காக பாரிஸ் கிளப் ஒஃப் நேசன்ஸ் (Paris Club of Nations) மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி ஆகியவற்றின் அதிகாரபூர்வ கடன் குழுவுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.

அடுத்த மாதம் மேற்கொள்ளப்படவுள்ள, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் குழுவின் மதிப்பாய்வுக்கு முன்னர் இந்த உடன்பாடு கைச்சாத்திட்ப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுபரிசீலனைக்கு முன்னர் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் என்பதில் அரசாங்கம் மிகவும் சாதகமான நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கைக்கான மதிப்பாய்வு சர்வதேச நாணய நிதியத்தின் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதும் நாட்டிற்கு 337 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தனியார் பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் சீன அபிவிருத்தி வங்கியின் வணிகக் கடன்கள் சம்பந்தப்பட்ட கடன்கள் எப்போது முடிவடையும் என்பது இன்னும் நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....