24 664abf068ec6e
இலங்கைசெய்திகள்

எந்நேரமும் மது போதையில் இருப்பவரே நாட்டின் இராணுவத் தளபதி

Share

எந்நேரமும் மது போதையில் இருப்பவரே நாட்டின் இராணுவத் தளபதி

எந்நேரமும் மது போதையில் இருப்பவரே இந்த நாட்டின் இராணுவத் தளபதி என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி(Chandima Weerakkody) குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்புத்துறையின் அதி உயர் பதவிகளை வகித்து வரும் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன மற்றும் மேஜர் ஜெனரல் இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோரை சந்திம கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நாட்டில் இராணுவத்தளபதி என்று ஒருவர் இருக்கின்றார். அவர் எப்போதும் மது அருந்திய வண்ணம் இருப்பவர். இராணுவத்தில் சிறந்த திறமையானவர்கள் உயர் பதவிகளை வகிக்கக் கூடியவர்கள் இருக்கின்றார்கள்.

இவ்வாறு வயோதிபர்களை அரசியல் ரீதியாக பதவிகளில் அமர்த்துவதனால் அவர்களுக்கு நாட்டில் என்ன நடக்கின்றது என்பதே தெரியாது.

முன்னாள் ஜனாதிபதி விரட்டியடிக்கும் வரையில் இவர்கள் என்ன செய்தார்கள்? புலனாய்வுப் பிரிவினதும், வயோதிப பாதுகாப்பு பிரதானிகளும் என்ன செய்தார்கள்?

அனைவரும் 55 வயதை கடந்தவர்கள். இந்த செயற்பாடுகளுக்கு பொருத்தமற்றவர்கள் என குறிப்பிடப்பட்டவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் பலத்தினைக் கொண்டு வயோதிபர்கள் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் என்ற ரீதியில் அசாத் சாலி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றவர்களை சிறையில் அடைத்தார்கள். எனினும் நீதிமன்றம் அவர்களை குற்றமற்றவர்கள் என தீர்ப்பு அளித்தது. அவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டதா?

தங்களுக்கு எதிரானவர்களுக்கு மட்டும் இவர்கள் எதிராக செயற்படுகின்றனர், நாட்டில் நடக்க வேண்டியது எதனையும் இவர்கள் செய்வதில்லை.

யுத்த வீரர்கள் எனப் போற்றப்படும் படையினர் இன்று பலிக்கடாக்களாக மாற்றப்பட்டுள்ளனர், உக்ரைன் – ரஷ்ய போரில் வாடகைப்படையாக ஈடுபடுத்தப்படுகின்றனர்

பாதுகாப்புச் செயலாளர் அவன்கார்ட் பிரதானியுடன் உலகின் எத்தனை நாடுகளுக்குச் சென்றார், என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து ஆராய தனியான புலனாய்வுப்பிரிவு நிறுவப்பட வேண்டும்.” என்றார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...