24 664945da3e672
இலங்கைசெய்திகள்

சொகுசு வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி: அரசாங்கத்திற்கு அதிக இழப்பு

Share

சொகுசு வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி: அரசாங்கத்திற்கு அதிக இழப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 15 வருடங்களில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு 10,000க்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், இந்த மோசடி தொடர்பான விசாரணைக்கு தரவு அமைப்பின் நகலை பெற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணைகளின் பின்னர், மோசடியில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு விசாரணை அதிகாரிகளுக்கு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியினால் ஏற்பட்ட நட்டத்தை விட இந்த மோசடி மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு மிக அதிகம் எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...