24 6649271ab1bce
இலங்கைசெய்திகள்

மறைக்கவோ மறுக்கவோ மறக்கவோ முடியாத நினைவு நாள்

Share

மறைக்கவோ மறுக்கவோ மறக்கவோ முடியாத நினைவு நாள்

பிரித்தானியாவில் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழ் உறவுகளால் முன்டுக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய இன்று 15 தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய கடிதமொன்றினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்கள் பிரதமர் அலுவலகத்தில் கையளித்தார்கள்.

தொடர்ந்து பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இணைந்து கொட்டொலிகள் எழுப்பி ஆரம்பமான நீதிக்கான போராட்டமானது பேரணியாக வெளிவிவகார அமைச்சகம் முன்பாக சென்று பிரதமர் வதிவிடம் வரை சென்றுள்ளது.

நினைவு நாள் நிகழ்வின் பொதுச்சுடரினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு கலை பண்பாட்டுக்கழக செயற்பாட்டாளர் அனுரா ஏற்றி வைத்துள்ளார்.

தொடர்ந்து பிரித்தானிய தேசியக்கொடி தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் பாப்ரா ராஜன் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு அரசியல் துறைப்பொறுப்பாளர் நியூட்டன் ஏற்றிவைத்தார்.

மேலும், மாவீரர் சுடர்த்தமிழின் தாயார் ரஞ்சினி பாலச்சந்திரன் நினைவு சுடரினை ஏற்றிவைக்க அகவணக்கத்தினை தொடர்ந்து நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கமும் தீப வணக்கமும் இடம்பெற்றது.

மேலும், இங்கிலாந்து தமிழின பேராளர்களின் உணர்வெளுர்சி பேரணி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

 

Gallery

 

 

GalleryGallery

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...