Ecuadorian prisone scaled
உலகம்செய்திகள்

2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

Share

தென்னமெரிக்க ஈகுவடார் நாட்டின் சிறையில் உள்ள 2000 ஆயிரம் சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்கள் விடுதலை செய்ய ஈகுவடோர் அரசு தீர்மானித்துள்ளது.

சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனக் கூறப்படுகிறது.

குயாஸ் மாகாணத்தில் துறைமுக நகரமான குயாகுவில் உள்ள சிறையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரு தரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாகி வெடித்தது.

அதில் இதுவரை 118 கைதிகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 79 கைதிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சிறைச்சாலையில் 39 ஆயிரம் கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

அதிக எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாலும் கைதிகளை கண்காணிப்பதற்கு போதிய அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடாததே மோதல்கள் வன்முறையில் முடியக் காரணமாகியுள்ளது.

இதன் காரணமாக சிறையில் அடைபட்டுள்ள கைதிகளில் பெண்கள், வயதானோர், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் என 2000 ஆயிரம் பேரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கைதிகளை குறைப்பதன் மூலம் பாதுகாப்பை அதிகரித்து மோதலை தவிர்க்கலாம் என அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...