24 66486f1836db4 1
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்கால் துயரத்தை கண்முன்னே கொண்டு வந்த நிகழ்வு

Share

முள்ளிவாய்க்கால் துயரத்தை கண்முன்னே கொண்டு வந்த நிகழ்வு

தனி நாடு கோரிய 3 தசாப்த உரிமைப் போராட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு மிகக் கொடூரமான முறையில் முடிவுறுத்தப்பட்டது.

உயிரைக் காத்துக் கொள்ள, உணவைப் பெற்றுக்கொள்ள, உறவுகளை காப்பாற்றவென்று அப்போது முள்ளிவாய்க்கால் மண்ணெங்கும் ஓடித்திரிந்தது தமிழினம்.

கண் முன்னே, தாயின் உயிர் பிரிந்ததையும், தான் பெற்ற பிள்ளையின் கை கால்கள் சிதறுண்டதையும், பாலுக்காய் தாயின் மார் தேடிய பச்சிளம் ஒன்று தாயின் உயிர் பிரிந்தது தெரியாமல் துடித்ததையும் எங்கணம் மறப்பது.

நாளை, எம் தாய்நாடு என்ற வேட்கையுடன் தன்னை அர்ப்பணித்து களமாடிய வீரர்களின் கண் முன்னே அந்த தாயகக் கனவு சிதைந்த கொடூரத்தின் வேதனையையும் எப்படி மறப்பது.

இப்படி துயரங்களை மட்டுமே கொடுத்த அந்த கொடூர நினைவுகளை சுமந்து இன்றும் முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர் சிந்தி கதறுகின்றது தமிழினம்.

அன்று கண்ட வேதனைகளை இன்றும் மீண்டும் மீட்டிப் பார்க்கும் வகையில், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளின் போது இளையவர்கள் ஒன்றிணைந்து கண்முன்னே கொண்டு வந்திருந்தனர்.

வரலாறு எமக்கு கொடுத்த துயரங்களை மீண்டுமொரு முறை மீட்டிப் பார்க்கும் தருணம் இது,

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...