covid e scaled
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் கொவிட் மாத்திரை வெற்றியளிப்பு!

Share

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக சுகப்படுத்துவதற்கு அமெரிக்க மருந்து நிறுவனமான ‘மெர்க்’ தயாரித்த ‘மோல்னுபிரேவிர்’ மாத்திரை வெற்றிகரமான முடிவுகளைக் கொண்டள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த பல மருந்துகளை உருவாக்கி வருகின்றன.

எனினும் ‘மோல்னுபிரேவிர்’ மாத்திரை ஆபத்தானது அல்லது எனவும் மருத்துவரின் பரிந்துரைப்படி வீட்டிலேயே பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த மருந்துகள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ மேற்பார்வையின் கீழ் மருத்துவமனைகளிலேயே வழங்கப்படுகின்றது.

மூன்றாம் தர மருத்துவ பரிசோதனைகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் மருந்தை பயன்படுத்துவதற்கு அனுமதி கோரி இந்த நிறுவனம் அனைத்து தரவுகளையும் சமர்ப்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த இரு வாரங்களில் இந்த மாத்திரை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...