இலங்கை
போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
![போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 1 24 664806c04c9e9 md](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2024/05/24-664806c04c9e9-md.webp?lossy=2&strip=1&webp=1)
போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்றாகும்.
15 ஆவது ஆண்டாக இன்று முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல இடங்களில் இறுதிப்போரில் உயிர் நீத்தவர்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூறப்படவுள்ளனர்.
அந்த வகையில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இன்று அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.