24 6646b93f057de
இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தரின் பணிப்பகிஷ்கரிப்பு – சடலத்தை அடக்கம் செய்ய முடியாத நெருக்கடி

Share

கிராம உத்தியோகத்தரின் பணிப்பகிஷ்கரிப்பு – சடலத்தை அடக்கம் செய்ய முடியாத நெருக்கடி

நாடாளவிய ரீதியில் கிராம உத்தியோகத்தரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல நெருக்கடிகளுக்கு மக்கள் முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாணந்துறை பரத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எனினும் கிராம உத்தியோகத்தரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சடலம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் முடிந்து கிராம அலுவலர் வரும் வரை சடலத்தை வீட்டில் வைக்க வேண்டிய நிலைமை அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமது சேவைக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாமை மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சேவைகளை பெற்றுக் கொள்ள வந்த மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அத்ததுடன், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...