24 66412ec5e312e
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டுத் தப்பியோடும் ஆபத்தான வர்த்தகர்கள்

Share

நாட்டை விட்டுத் தப்பியோடும் ஆபத்தான வர்த்தகர்கள்

இலங்கையின் முக்கியமான போதைப்பொருள் வர்த்தகர்கள் பலரும் அண்மைக்காலமாக நாட்டை விட்டும் தப்பியோடத் தொடங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

யுக்திய மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்படவிருந்த பலரும் இவ்வாறு தப்பி ஓடியுள்ளனர்.

மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தை இலக்காகக் கொண்டு பல வருடங்களாக இவர்கள் போதைப்பொருள் வியாபாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு இவர்களின் பெயர் மற்றும் வசிப்பிடம் தொடர்பிலான பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த நபர்கள் கைது செய்யப்படவுள்ள விபரம் பொலிஸ் திணைக்களத்திற்கு உள்ளிருந்தே போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு வழங்கப்படுவதன் காரணமாக அவர்கள், தம்மைக் கைது செய்ய பொலிஸார் தேடிவர முன்னரே நாட்டை விட்டும் தப்பியோடத் தொடங்கியுள்ளனர்.

அத்துடன் இவர்களுள் அநேகமானோர் வெளிநாடுகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் துபாய் போன்ற பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு இலங்கையில் போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக்கும்பல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...