24 663d74e96db5a
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் செயலாளருக்கு பறந்த கடிதம்

Share

ஜனாதிபதியின் செயலாளருக்கு பறந்த கடிதம்

தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு(Saman Ekanayake) கடிதம் மூலம் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெவ்ரல் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்கள் தொடர்பான அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இந்நிலையில் வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களை ஜூலை மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.

மேலும், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பதாகவே அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களின் போது முன்னெடுக்கப்படுகின்ற தேர்தல் பிரசாரங்கள் தொடர்பாக அவதானித்து வருவதாக பெவ்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...