24 663c5aaf29e4f scaled
இலங்கைசெய்திகள்

மைத்திரியின் வீட்டிற்கு முன்னால் குவிக்கப்பட்ட பொலிஸார்

Share

மைத்திரியின் வீட்டிற்கு முன்னால் குவிக்கப்பட்ட பொலிஸார்

கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) வீட்டிற்கு முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை தனக்கு தெரியும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து அவர் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் என்ற அமைப்பினர் மைத்திரிபாலவை நேரில் சந்தித்து அவரிடம் யார் அந்த சூத்திரதாரி என்ற கேள்வியை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவரின் வீட்டிற்கு முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் வீதித்தடைக்கு முன்னால் மறிக்கப்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸாரிடமும் ஊடகங்களிடமும் கருத்துக்களை முன்வைத்ததையடுத்து பின் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த விவகாரத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் அமைப்பினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...