24 663bc3bc1b985
உலகம்செய்திகள்

காசாவுக்கான முக்கிய எல்லையை திறந்த இஸ்ரேல்

Share

காசாவுக்கான முக்கிய எல்லையை திறந்த இஸ்ரேல்

காசா(Gaza) போரானது சர்வதேச ரீதியில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் முக்கிய எல்லை பகுதியை இஸ்ரேல்(Israel) மீண்டும் திறந்துள்ளது.

கடந்த வார இறுதியில் காசாவின் முக்கிய எல்லை பகிடியான கெரெம் ஷாலோமை இலக்கு வைத்து ஹமாஸ் வான்வழி தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்த தாக்குதலில் 4 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக கெரெம் ஷாலோம் எல்லையை இஸ்ரேல் அதிரடியாக மூடியது.

காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதோடு ஐ.நா. மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்தன.

இந்த நிலையில் கெரெம் ஷாலோம் எல்லை பகுதியை இஸ்ரேல் மீண்டும் திறந்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. போரில் காசா நகரம் பாதிப்படைந்துள்ளதோடு இலட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்காக உலக நாடுகள் மனிதாபிமான உதவிகளை வாரி வழங்கி வருகின்றன.

எனினும் காசாவுக்குள் நுழைவதற்கு இஸ்ரேல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளமையினால் மனிதாபிமான உதவிகளில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....