24 66340b478b590
இலங்கைசெய்திகள்

தென்னையால் இலங்கைக்கு பாரிய வருமானம்

Share

தென்னையால் இலங்கைக்கு பாரிய வருமானம்

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தகவலின்படி, 2024 மார்ச் மாதத்தில் தென்னை தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 19131 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

தென்னை தொடர்பான பொருட்கள் மற்றும் ஏற்றுமதியின் வருமானம் தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள மாதாந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென்னை தொடர்பான உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பான அறிக்கை விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் (Mahinda Amaraweera) தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெர்னாண்டோவினால் (Roshan Fernando) கையளிக்கப்பட்டது.

அதன்படி, 2024 மார்ச் மாதத்தில் தோட்டக்கலைக்காக இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தென்னை நார் 38,065 மெட்ரிக் தொன் ஆகும். கிடைத்த வருமானம் 5725 மில்லியன் ரூபா. 2023 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தத் தொகை 29 சதவீத வளர்ச்சியாகும்.

தேங்காய் மட்டைகளிலிருந்து 5,707 மெட்ரிக் தொன் செயற்படுத்தப்பட்ட காபன் ஏற்றுமதி மார்ச் 2024 இல் ரூ.4,430 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 3122 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய்ப்பாலின் அளவு 7,059 மெட்ரிக் தொன். தேங்காய் ஏற்றுமதி மூலம் மார்ச் மாதத்தில் 2,378 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

அந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட உலர் தேங்காயின் அளவு 3592 மெட்ரிக் தொன் ஆகும்.

பவுடர் ஆக்கப்பட்ட தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 1,587 மில்லியன் ரூபாவும், தேங்காய் கிரீம் ஏற்றுமதி மூலம் 1,390 மில்லியன் ரூபாவும், தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி மூலம் 539 மில்லியன் ரூபாவும் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...