24 663439f77bcf4
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு கடன் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

Share

வெளிநாட்டு கடன் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

வருடாந்தம் சுமார் 2.5 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு கடனாக செலுத்தப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya) தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடன் செலுத்துதல் உத்தியோகபூர்வமாக இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், இந்த தொகை கடனாக செலுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இருதரப்பு வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகள் மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் கொடுப்பனவு இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர், அவர்கள் வருடாந்தம் சுமார் 5 பில்லியன் டொலர்களை செலுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடன் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்ட போதிலும், 2022 ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் டொலர்களும், 2023 ஆம் ஆண்டில் 2.6 பில்லியன் டொலர்களும் வெளிநாட்டுக் கடனாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...