24 663458afd2181 1
இலங்கைசெய்திகள்

நடிகை தமிதா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Share

நடிகை தமிதா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

சிங்கள திரைப்பட நடிகை தமிதா அபேரட்ன(Damitha aberathna), இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அநீதியான முறையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தமிதா மற்றும் அவரது கணவர் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தமிதா மற்றும் அவரது கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக தாம் அரசியலில் பிரவேசித்த காரணத்தினால் தமக்கு எதிராக இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...